மனித நேயமிக்க மகத்துவமான செயலால் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருளிபட்டி பகுதியில் வருமானமின்றி வசிக்கும் பெண் ஒருவர் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிலைமணி அவர்களை நேரில் சந்தித்து எனக்கு 2 குழந்தைகள் உள்ளது என்றும் தற்சமயம் மிகவும் சிரமத்தில் உள்ளதாக அப்பெண் தெரிவித்த நிலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் சற்றும் தாமதிக்காமல் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசாய பொருட்களை அப்பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கினார்கள்.
மேலும் உதவியை பெற்றுக் கொண்ட பெண் தேனி மாவட்ட காவல் துறையினருக்கு தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்.