Police Department News

2021 ம் ஆண்டுக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் துப்பாக்கி சுடும் போட்டி

2021 ம் ஆண்டுக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் துப்பாக்கி சுடும் போட்டி

2021 ம் ஆண்டுக்கான காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று 29 ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது, தென் மண்டல காவல் துறை தலைவர் திரு. J.S.அன்பு IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சரக டி.ஐ.ஜி.,கள் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் , மதுரை, பழனி, ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டுகள் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர துணை ஆணையர்கள், என 18 காவல் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகள் கொண்டு சுடும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் திரு. அன்பு IPS., காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை அவர்கள் முதலிடத்தையும், திரு. தேஷ்முக் சேகர் IPS., கமாண்டன்ட் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6 ம் அணி அவர்கள் இரண்டாம் இடத்தையும் திரு.டோங்ரே பிரவி உமேஷ் IPS., காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம், அவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் திரு. தேஷ்முக் சேகர் IPS., கமாண்டனட் த.சி.கா. 6 ம் அணி அவர்கள் முதலிடத்தையும், திரு. அன்பு IPS., காவல்துறை தலைவர், தென் மண்டலம் அவர்கள் இரண்டாம் இடத்தையும் திரு. டோங்ரே பிரவின் உமேஷ் IPS., காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம் அவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். அனைத்து போட்டிகளின் முடிவில் திரு. தேஷ்முக்சேகர் IPS., கமோண்டன்ட, த.சி.கா. 6 அணி, அவர்கள் முதலிடத்தையும், திரு. அன்பு IPS., காவல்துறைத் தலைவர், தென் மண்டலத் தலைவர் அவர்கள் இரண்டாம் இடத்தையும், திரு.டோங்ரே பிரவின் உமேஷ் IPS., தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூன்றாம் இடத்தையும் கைபற்றினார்கள்.

இதே போல் மாநிலம் முழுவதும் துப்பாக்கி சுடும் போட்டி மண்டலம் வாரியாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் மூன்று இடங்களை பெறும் அதிகாரிகள் சென்னையில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் இந்த துப்பாக்கி சுடும் போட்டியை திரு. ஜெயசந்திரன் IPS., அதிவிரைவுப்படை, காவல் கண்காணிப்பாளர், சென்னை அவர்கள் தலைமையில் வந்த காவல் அதிகாரிகள் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.