Police Department News

அண்ணன்‌ வெட்டிக்கொலை- அண்ணிக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

தர்மபுரி மாவட்டம்பாப்பாரப்பட்டி அருகே

அண்ணன்‌ வெட்டிக்கொலை- அண்ணிக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி தம்பி வெறிச்செயல்!

பாப்பாரப்பட்டி அருகே சக்கிலி நத்தம் கிராமத்தில் செய்வினை வைத்து தனது மாட்டை கொன்று விட்டதாக கூறி ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொலை செய்து அண்ணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக்கிலி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் வயது 45. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கோயமுத்தூர், ஈரோடு பகுதிகளில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது தம்பி குமார் வயது 40. விவசாயி. குமார் இரண்டு மாட்டு கன்றுகளை வளர்த்து வந்தார். இரண்டு கன்றுகளும் சமீபத்தில் இறந்து விட்டன. மாட்டுக் கன்றுகள் இறந்ததற்கு காரணம் அவரது அண்ணனும் அண்ணியும் செய்வினை செய்வது தான் என்று கூறி குமார் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த அண்ணன் வெங்கடேசன் மற்றும் அண்ணி பெருமா ஆகியோரிடம் சென்று எனது மாட்டை செய்வினை வைத்து கொன்று விட்டீர்கள் என்று கூறி கையில் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார் இதில் மண்டை பிளந்து வீட்டு வாயிலில் வெங்கடேஷன் சரிந்து விழுந்தார். தடுக்க வந்த அண்ணி பெருமா -வையும் குமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கடேசன் பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயத்துடன் பெருமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தரராஜன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.