Police Department News

பயணம் இருவருக்கு, பாதுகாப்பு மட்டும் ஒருவருக்கா?இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். காவல்துறை அறிவுறுத்தல்

பயணம் இருவருக்கு, பாதுகாப்பு மட்டும் ஒருவருக்கா?
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். காவல்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் தவறினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நடைமுறை பல் வேறு மாவட்டங்களில் அமுலுக்கு வந்தது.
மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துணைக்கமிஷனர் ஆறுமுகசாமி அவர்கள் உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து
மதுரை தெப்பக்குளம் போக்குவராத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள், தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்கள் தெற்குவாசல் போக்குவராத்து காவல் ஆய்வாளர் கனேஷ்ராம் அவர்கள் ஆகியோர்கள் நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

ஹெல்மெட் அணியாமல் மோட்டர் சைக்கிள் ஓட்டிய 545 பேரும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணித்த 194 பேரும் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 23 பேரும் பிடிபட்டனர் அவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். மேலும் யூனிபார்ம் அணியாமல் ஆட்டோ ஓட்டிய 74 டிரைவர்களும் பிடிபட்டனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகரம் முழுவதும் பஸ் நிறுத்தங்களில் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவ மாணவிகளிடம் பஸ்ஸுக்குள் செல்லும்படி அறிவுறித்தினர். பஸ் நிறுத்தங்களில் நின்று கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் போக்குவராத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை குறித்து அறிவுரை வாழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.