Police Department News

மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர்

மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி. இவரது மனைவி செல்லம்மாள். சாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த செல்லம்மாள் இரவு தூங்க சென்றார்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது செல்லம்மாள் கழுத்து, முகம் பகுதிகளில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு, இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல், குற்றப்பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். கொலைக்கான கா ணம் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை யுண்ட செல்லம்மாளுக்கும், உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த சின்னன் மகன் குணா (வயது45) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் செல்லம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் குணா, அவரது கூட்டாளி மாரிமுத்து (35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.