Police Recruitment

கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

இடம்:திருப்பூர் மாநகரம்
நிலையம்:வடக்கு காவல் நிலையம்

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் தலைமையில் தலைமை காவலர் காளிமுத்து(கா.எண் 574) மற்றும் முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்(கா. எண்316)ஆகியோர் தனிப்படை அமைத்து கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பனியன் குடோன் உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்த பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகரைச்சேர்ந்த மணிகண்டன்(23) என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.