
மதுரை தாமரைப்பட்டி பகுதியில் நடந்த உலக மன சிதைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்
உலக மனச்சிதைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம், மனநலக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவும் நடத்தப்படுகிறது.
கடந்த 24.05.2025 உலக மனச்சிதைவு தினம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , மதுரை புதூர் தாமரைத் தொட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி சிறப்பு பூங்காவில் Composite Regional Centre (CRC – Madurai) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி எஸ் வனிதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
