
விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை:-
போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி.
அதிகாலை வேளையில் அரசு, தனியார் பேருந்து செல்லும் சாலையில் ஒருபுறம் லாரியை நிறுத்தி சரக்கு ஏற்றுவதும் இறக்குவதும் என்று பொது போக்குவரத்துக்கு இடையூறாக 1 மணி நேரத்திற்கு மேலாக நிற்கிறது.
அவ்வழியாகச் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து தடைபடுகிறது. இந்த பகுதியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் இருக்கும் போது வாகனத்தை நிறுத்தாதீர்கள் போக்குவரத்து தடைபடும் என்று எடுத்துக் கூறியும், அதையும் மீறி வாகனத்தை நிறுத்தி அவர்களது வேலையை செய்து வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் சென்றுவரும் சாலையில் இவ்வாறாக வாகனத்தை நிறுத்தி வருவதால், வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பலரும் உள்ளனர்.
இதைத்தவிர போக்குவரத்திற்கு இடையூறாக அராஜகம் செய்யும் லாரியை பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
VRK. ஜெயராமன் MA,Mphil
மாநிலச் செய்தியாளர் அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்
