Police Department News

மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார்

மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார்

மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் கடந்த 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் என தெரிய வந்தது இந்த வாகனத்தை திருடி ஓட்டி வந்த நபர் மதுரை சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவரது மகன் கார்த்திகேயன் வயது 35 அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டான் மேலும் திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

வாகன சோதனை அலுவலில் சிறப்புடன் பணிபுரிந்து இருசக்கர வாகனத்தையும் திருடிய நபரையும் பிடித்த சீரிய பணியை பாராட்டும் விதமாக காவல் ஆணையர் அவர்கள் நேரில் அவர்களை அழைத்து
பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்

Leave a Reply

Your email address will not be published.