கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடுவால்வு பேருந்து நிறுத்ததில் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. வேலம்மாள்அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது என ஆலோசனை வழங்கி, பெண்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை தாங்கள் தான் உறுதி செய்ய வேண்டும், தனியாக எங்கும் வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது, முகம் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என அறிவுறுத்துங்கள் என பெண்கள் மத்தியில் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.