National Police News

குற்றாலம் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு

குற்றாலம் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் கண்ணன் என்ற சரவணன் (வயது 10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாறனேரி குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.

அங்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளான். இதனை கண்ட அவனது நண்பர்கள் , ஊருக்குள் சென்று பெரியோர்களை அழைத்து வருவதற்குள் கண்ணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.