Police Department News

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் உள்ள புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.திலகவதி அவர்களின் முழு முயற்சியில் அனைத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து 100 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் 13.04.2020- ம் தேதியன்று காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் வழங்கினார். மதுரை மாநகரில் உள்ள 24 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இத்திட்டம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்பட்டு உதவி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.