Police Department News

மதுரையில் பட்டபகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படு கொலை, நகை, பணம் கொள்ளை

மதுரையில் பட்டபகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படு கொலை, நகை, பணம் கொள்ளை

மதுரையில் பட்டப் பகலில், பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படுகொலை செய்து, நகை 5 பவுன், மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, நேரு நகரில் உள்ள பாலாஜி தெருவில் தங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதில் டீ கடை நடத்தி வருகிறார், இவரது மனைவி பஞ்சவர்ணம் வயது 62,/20. இன்று மதியம் இவர் தனது கணவரை டீ கடையில் சந்தித்து பேசி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார், அது சமயம் சில மர்ம நபர்கள் இவர் மீது மிளகாய் பொடியை தூவி, தலையில் வெட்டி படு கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை, மற்றும் வீட்டிலிருந்த ஒரு லச்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதியம் 1 மணியளவில், கணவர் தங்கம் சாப்பிட வீட்டிற்கு வந்த போது தனது மனைவி பஞ்சவர்ணத்தம்மாள் தலையில் வெட்டு காயத்துடன் கொலையுண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார், உடனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ய, உடனே SS காலனி C3, காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளர் பிளவர் ஷீலா, குற்ற பிரிவு ஆய்வாளர் இளவரசு, மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மற்றும் அந்த பகுதியில் உள்ள CC TV கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர் பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.