கன்னியாகுமரி மாவட்டம் 01.11.2019 ம் தேதி மண்டைக்காடு பகுதியில் ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருந்தபோது அங்கு சுற்றி திரிந்த இரு மனநோயாளிகளை கொட்டாரம் பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து அந்த மன நோயாளிகளை ஆயுதப்படை காவலர் திரு. விஜிகுமார் அவர்கள் மன நல காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் […]
Police Recruitment
குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார் சிவகங்கை நகர் காவல்துறை ஆய்வாளர் திரு மோகன் அவர்கள்.
சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் 26/19, அருண் நாதன் 24/19, பரமசிவம் 27/19, அருள் 30/19, அருண்பாண்டியன்20/19, பிரவீன் 20/19, அரவிந்த் 26/19, ஆனந்த் பாபு 32/19, வசந்த் 24/19 ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் ராஜகோபால் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி […]
சிவகங்கை நகர் காவல்துறை ஆடு திருடிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சிவகங்கை மாவட்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் ஆடு மருதப்பசாமி கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இதுதொடர்பாக கணேசன் .25.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முனீஸ்வரன் மற்றும் தயாநிதி ஆகியோர் மீது u/s 379 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து 02.11.2019 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ச. அரவிந்தசாமி […]
காவல்துறை அறிவிப்பு அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலைய குற்ற எண்: 249/2019u/s174CrPC
மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 94981 27328 – 94981 80942 044-25951114. மேலும் தொடர்புக்கு D. பரந்தாமன்.SI உதவி ஆய்வாளர் இருப்புப்பாதை காவல் நிலையம் கொருக்குப்பேட்டை சென்னை-21 போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் M.குமரன்
தமிழகம் முழுதும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். இடமாற்றம் விபரம் வருமாறு. 1. சேரன்மாதேவி ஏஎஸ்பி ஆஷிஸ் ராவத் எஸ்பி யாக பதவி உயர்த்தப்பட்டு (புது டெல்லி) தமிழ்நாடு சிறப்பு காவற்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 2. தமிழ்நாடு 11-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை, புதுடெல்லி கமாண்டண்ட் ஜனகன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையம், 11-வது […]
ரயில் பயணிகளிடம் தொடர் வழிப்பறி | மூவரை கைது செய்த ரயில்வே போலீசார் |
சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததால் புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது பேசின் பாலம் ரயில் நிலைய வடகோடியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த கன்னிகாப்புரத்தை என்று சேர்ந்த ஆகாஷ் (21), என்பவரை ரயில்வே போலீசார் கைது. இவரிடம் நடத்திய விசாரணையில் பேசின் பாலம் ரயில் நிலையம் மார்க்கமாக ரயிலில் பயணிக்கும் […]
மோசடியில் ஈடுபட்டதாக தலைமைச் செயலக ஊழியர் உட்பட | இருவரை கைது செய்து போலீசார் விசாரணை |
|சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனக்கு 4 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி தருவதாக கூறி குணசேகரன் என்ற நபர் ஏமாற்றி விட்டதாக கூறி பூக்கடை காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தலைமை செயலகம் அருகே கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக தமிழ்நாடு அரசு என பெயர் அச்சிடப்பட்டு வந்த ஒரு காரை […]
திருச்சி : மீன்பாடி வண்டிக்கு பதிலாக புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த காவல் ஆணையர்
திருச்சி மாநகரில் பெருமளவில் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில், இயங்கி வந்த சுமார் 150-க்கும் மேலான மோட்டார் பொருத்திய மீன்பாடி வண்டிகள் தடை செய்து¸ மீன்பாடி வண்டிகளை ஓட்டும் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கான வங்கி கடன் காவல்துறையால் ஏற்பாடு செய்து¸ புதிய சுமை ஏற்றும் ஆட்டோக்கள் வாங்கி திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். திரு. அமல்ராஜ்¸ இ.கா.ப. அவர்கள் வழங்கினார்கள். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை […]
விரைவு செய்திகள். அயோத்தி வழக்கு தீர்ப்பு… போலிசாருக்கு புதிய உத்தரவு
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கின் தீர்ப்பானது மிக விரைவிலேயே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச போலீசாருக்கு அம்மாநில காவல்துறை தலைமையகத்திலிருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், மிலாடி நபி, குருநானக் ஜெயந்தி, அயோத்தி தீர்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு, நவம்பர் 1 முதல் போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு […]
வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் மதுரை காவல்துறையினர் எச்சரிக்கை
வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ கா ப விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு மதி லோகேஸ்வரி அவர்களுக்கு வைகை ஆற்றை சுற்றிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கும்படி உத்தரவிட்டார் அவர்கள் உத்தரவுப்படி இன்று காவல் ஆய்வாளர் அறிவிப்பு பலகைகள் வைத்தார் மேலும் வைகை ஆற்றில் யாரும் இறங்காமல் இருக்க ரோந்து காவலர்களும் சுழற்சி சுழற்சி முறையில் […]
