Police Department News

Dr.R.Sivakumar  (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர்

ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar  (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்

Police Department News

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டம்: காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸாரின் கெடுபிடி காரணமாக நேற்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக மெரினாவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காவல் ஆணையர்  A.K.விஸ்வநாதன்    தடை விதித்துள்ளார். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் […]

Police Department News

மெரினாவில் போராட்டம் நடத்தியதாக 18 பேர் கைது: காவல் ஆணையர் நேரில் ஆய்வு

மெரினா கடற்கரையில் திடீர் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட விஷயங்களை காவல் ஆணையர் மெரினாவில் நேரில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதால் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் […]

Police Department News

குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை என்னும் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருப்தால் மக்கள் பேரும் அவதிப் படுகிறார்கள் எனவே கோவம் அடைந்த பொதுமக்கள் தண்ணீர் குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர் பின்னர் பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர் Police e News Reporter K.RAMESH

Police Department News

ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேர் கைது

சென்னை ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் காணாமல் போனது. இப்பகுதி கண்காணிப்புக் காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அடுக்கு மாடிக் குடியிருப்பின் முன்னாள் காவலாளியான ஜெகதீசன் என்பவர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.  இதையடுத்து ஜெகதீசனினின் செல்ஃபோன் சிக்னல்களை ஆய்வு செய்த போது அவர் கும்பகோணத்தில் இருந்தது தெரியவந்தது. கும்பகோணத்தில் லாட்ஜ் […]

Police Department News

IT நிறுவன ஊழியர்கள் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த 2 கொள்ளையர்கள் கைது

சென்னையில் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த, வேலூர் மாவட்ட கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜிவ்காந்தி சாலை, கண்ணகி நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேப்டாப், இருசக்கர வாகனங்கள், நகைகள் திருட்டு குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து குற்றவாளிகளைத் தேடி வந்த கண்ணகி நகர் போலீசார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாப்கள், 5 சவரன் […]

Police Department News

சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் கடைக்கு சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர்.. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் பிறப்புறுப்பில் ரத்த காயம் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு மனித மிருகம் பாலியல் கொடுமை செய்திருப்பது தெரிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். […]

Police Department News

சென்னை விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சபிலால் நேபாளத்தில் கைது

சென்னை ஆற்காடு சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சபிலால் சந்த் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.  சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த திங்கட் கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கர் அறையின் இரும்புக் கதவை கேஸ்வெல்டிங் வைத்து துளையிட்ட கொள்ளையர்கள், லாக்கர்களையும்  வெல்டிங் வைத்து உடைத்தனர். கேஸ் தீர்ந்து விட்டதால் இரு லாக்கர்களை மட்டும் உடைத்து அதிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். […]

Police Department News

தேர்வு எழுத காரணமாக இருந்த இரண்டு காவலர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அரசுதேர்வு பணிக்கு சென்ற Gr I,pc 501 மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வேண்டிய +1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவன் மட்டும் நேரம் 9:50 ஆகியும் இன்னும் வரவில்லை என்று கூறினார். உடனே காவலர் மதன் மாணவரின் விலாசம் […]

Police Department News

காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு

காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு: என் இருசக்கர வாகனம் எரிபொருள் இல்லாமல் தீவு திடல் அருகே நின்று விட்டது. அங்கே போக்குவரத்து காவல் பணியில் இருந்த திரு.தாமோதரன் அவர்கள் என்னை அழைத்து நடத்திய விதம் மிக மிக அருமை, இப்படியும் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் என்று மனம் குளிர்ச்சி அடைகிறது. அவர் சிறிது நேரம் கூட என்னை வெயிலில் நிற்க விடவில்லை, அக்கறையோடு பேசினார், அதுபோக தன்னுடைய வாகனத்தில் இருந்து எரிபொருள் எடுத்து தருகிறேன் […]