
மதுரை, எஸ்.எஸ்.காலனி பகுதியில் குடும்பத்தகராறில் மனையின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரை, S.S.காலனி, பாரதியார் 5 வது தெருவில் குடியிருந்து வருபவர்கள் சிவகுமார், மேரிகுட்டி தம்பதியினர் சிவக்குமார் அவர்கள் ரயில் வே சிக்னல் ஆப்ரேட்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.கணவன் மனைவி, இவர்களுக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆகின்றன, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்கள் தனியாக வழ்ந்து வந்தார்கள் இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது அதே போல் நேற்று குடும்பத்தகராறு ஏற்படும் போது ஆத்திரமடைந்த கணவர் சிவகுமார் அவர்கள் மனைவி மேரிகுட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் தகவல் அறிந்த எஸ்.எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து கொலை செய்யப்பட்ட மேரிகுட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அதன் பின் மனைவியை கொலை செய்த கணவர் சிவகுமாரை எஸ்.எஸ். காலனி போலீசார் கைது செய்து ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
