Police Recruitment

தனியார் மருத்துவமனையில் பெண் பணியாளர் கொலை

மதுரை மாவட்டம்

தனியார் மருத்துவமனையில் பெண் பணியாளர் கொலை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது ( 75)
இவருக்கு ஆறு மகன்கள், மூணு மகள்கள், உள்ளனர்;
முத்துலட்சுமி உள்பட இவரது குடும்பத்தினர் ஆறு பேரும் மதுரை உத்தங்குடி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல்வேறு பணிகளில் உள்ளனர்., முத்துலட்சுமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வணிகச் சென்ற முத்துலட்சுமி வழக்கமான நேரத்தை கடந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து இவரது வீட்டிலிருந்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் முத்துலட்சுமி மகன் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர்,
இதையடுத்து, அவர் பல இடங்களிலும் தனது தாயை தேடினார்.

அப்போது மருத்துவமனையின் ஆறாவது தளத்தில் முத்துலட்சுமி முகத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்த இங்கு வந்த மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது முத்துலட்சுமியின் முகம் காது ஆகிய பகுதிகளில் காயம் இருந்ததும், அவர் அணிந்திருந்த தங்கத்தோடு மூக்குத்தி ஆகியவை திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரது உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.