
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (14.03.2025) மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் Anti Drug Club மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ள மதுரை மன்னர் கல்லூரி மாணவர்கள் இணைந்து, போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பாக பறையடித்து பாடல்கள் பாடியும், குறு நாடக வடிவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கொண்டனர்.
