Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கோட்டநத்தம்பட்டியில் வசித்து வருபவர் செல்வம் மனைவி சிந்தனைச்செல்வி வயது 30/2020,

இவர்களது மகள் கோட்டநத்தம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார், இவர் கொரோனா விடுப்பில் வீட்டிலிருந்து வந்த நிலையில் கடந்த 4 ம் தேதி காலையில் வயலுக்கு சென்றுள்ளார், வெகு நேரமாகியும் திரும்பி வர வில்லை, எனவே இவர்களது பெற்றோர், அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை, எனவே கீழவளவு காவல் நிலையத்தில் தன் மகளை கண்டுபிடித்து தரும்படி அவரது தாய் சிந்தனைச் செல்வி புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின் படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.