என்பதை தெரிவிப்பதற்காகவே அருப்புக்கோட்டை காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி 3/3/18 சனி காலை 7.15 மணியளவில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றபோது எடுத்தபுகைபடம். VRK.ஜெயராமன் MA Mphil. மாநில செய்தியாளர், அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்.
Author: policeenews
முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி
முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் […]
பணி நிறைவு விழா: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் CID SI யாக பணியாற்றுபவர்
திரு.கண்ணன் அவர்கள் மக்களின் நலனுக்காக காவல் துறையில் இனைந்து அரும்பணியாற்றி இனிதே பணி நிறைவு பெறுகின்ற விழா நடைபெற்றது அவரை பற்றிய சில வார்த்தைகள் சிரித்த முகம்,பளிச்சிடும் பேச்சு,பணியில் திறமையும் நேர்மையும் இவருடன் ஒட்டிப்பிறந்தது என கூறலாம் திரு.கண்ணன் அவர்களின் பணி நிறைவு விழாவின் போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி திரு.கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனபால் மற்றும் திரளாக […]
சென்னையில் பயங்கரம்: கூடா நட்புக்கு இடையூறு; 9 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த இளைஞர் கைது
சென்னையில் நடுத்தர வயதுப் பெண்ணுடன் கூடா நட்பு வைத்திருந்த இளைஞர், அந்த நட்புக்கு இடைஞ்சலாக இருந்த 9 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்தார். இதனால் அந்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். சிறுவனின் தாயை விசாரித்து வருகிறார்கள். சென்னை எம்ஜிஆர் நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (38). வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை […]
கோட்டூர்புரத்தில் கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம்: கொலையா?- போலீஸ் விசாரணை
இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செல்லையா (48). கால் டாக்ஸி ஓட்டுநராக பிரபலமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, போனையும் எடுக்கவில்லை என்று அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்று காலை திருவான்மியூர் போலீஸார் கால் டாக்ஸி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது காரின் ஜிபிஎஸ் செல்லையா ஓட்டிய […]
மனிதநேயமிக்க காவலர்- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் 25/2/18 ஞாயிறு காலை 10.00 மணியளவில் முத்திரையர் சிலை திறப்புவிழா நடைபெற்றது
கூட்டம் அதிமாக இருக்கும் என கருதி காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலையில் மணிபர்ஸ் ஒன்று அனாதையாக இருந்ததை காவல் துறை யினர் பார்த்து அதை சோனை செய்தபோது 5000 ரொக்கமும் 3 ATM அட்டையும் Driving licence இருந்தது அதில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரை அழைத்து முழுமையாக ஒப்படைக்கப்பட்டது வாழ்க காவல் துறை வளர்க எழுச்சியூட்டும் பொதுமக்களின் நலனுக்காக கண் அயராது என்றும் உன்னதமாய் செயல்படும் நமது காவல் துறைக்கு […]
திருவான்மியூரில் பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போன் பறிப்பு: போக்குவரத்து நெரிசலால் சிக்கிய இளைஞர்கள் கைது
திருவான்மியூரில் பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்த இளைஞர்கள் போக்குவரத்து நெரிசலால் போலீஸாரிடம் சிக்கினர். சென்னை ராணுவ தலைமையகத்தில் கேப்டனாக இருப்பவர் சிம்ரன் பேடி சேத்துப்பட்டில் வசிக்கிறார். இவர் நேற்று மாலை திருவான்மியூர் கலாசேத்ரா சாலையில் தனது நண்பரை பார்க்க வந்துள்ளார். பின்னர் வீடுதிரும்ப அவர் வெளியே சாலைக்கு வந்தபோது, அவரிடமிருந்த செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து சென்றனர். அப்போது இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை துரத்தினர். ஆனால் […]
பாளையங்கோட்டையில் தாக்குதல்: உதவி பேராசிரியர் படுகொலை
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வீடு மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல், தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரை குத்திக் கொலை செய்தது. தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயலெட்சுமி. புதிய தமிழகம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த குமார், அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது […]
திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலையான சம்பவம்: தாய், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக புகார்- ஆதிதிராவிடர் நல தேசிய ஆணையத்தின் அதிகாரி ஆய்வு
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். மேலும், சமயன் என்ற 4-ம் வகுப்பு படித்துவந்த மகன் இருந்தார். கடந்த 21-ம் தேதி நள்ளிரவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் மனைவி, மகள் […]
இந்தக் குடிகார அப்பா எனக்கு வேண்டாம்”: காவல் நிலையத்தில் கதறிய 11 வயது சிறுவன் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும் போலீஸார் உறுதியளித்தனர்
மது அருந்திவிட்டு தினமும் தம்மை அடித்து துன்புறுத்தும் குடிகார அப்பா தனக்கு வேண்டாம் என தெலங்கானா மாநிலத்தில் 11 வயது சிறுவன், காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் போலீஸாரை நெகிழச் செய்தது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மாத்கால கூடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், சசிகுமார் (11) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சசிகுமார், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு […]