மதுரையில் சட்டவிரோதமாக மது,குட்கா, விற்ற 19 பேர் கைது
மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது மற்றும் குட்கா பொருட்கள் விற்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதிகளில் மது கடைகள் திறப்பதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக டீ கடைகள், பொது இடங்களில் மது விற்பனை செய்த 8 பேர் நேற்று மதுரை மாநகர காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர்களிடமிருந்து 290 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தல்லாகுளம், எஸ்எஸ் காலனி தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.