Police Department News

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த கொலை மற்றும் திருட்டு வழக்கு எதிரி கைது – அரிவாள் பறிமுதல்.

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த கொலை மற்றும் திருட்டு வழக்கு எதிரி கைது – அரிவாள் பறிமுதல்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள்: மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (29.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கருங்குளம் பகுதியில் உள்ள கோவிலின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த செய்துங்கநல்லூர் படையாச்சி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகேஷ் செல்வம் (எ) மகேஷ் (25) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி மகேஷ் செல்வம் (எ) மகேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி மகேஷ் செல்வம் (எ) மகேஷ் என்பவர் மீது திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மானூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.