Police Department News

மதுரையில்வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது

மதுரையில்
வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது

மதுரை அன்சாரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் லியோன் (40). வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மகபூப்பாளையம் வாய்க்கால் கரைக்கு வந்தார். குழந்தை மாரியம்மன் கோவில் அருகே, குடிபோதையில் இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர்.

இதை ஆரோக்கிய ஜோசப் லியோன் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதில் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தி ல்குமார் ஆவர்கள் உத்தரவிட்டார்.

தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அடங்கிய தனிப்படை அமைக்க ப்பட்டது.

அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி எல்லீஸ் நகர் சலீம் மகன் முஸ்தபா (24), மகபூப்பாளையம், கோவில் பிள்ளை காலனி பொன்ராஜ் மகன் மணிமுத்து (24), எஸ்.எஸ். காலனி ஜோதி மகன் டேவிட் குமார் (24), அன்சாரி நகர் நூருதீன் சசுலி மகன் மவுலி ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.