Police Department News

சென்னையில் நகை திருடர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் இ.கா.ப உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நகை திருடர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் இ.கா.ப உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

அண்ணாநகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக் மற்றும் பரத்குமார் (எ) பரத் ஆகியோர் K-4 அண்ணாநகர் காவல் குழுவினரால் கைது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10,50,000/- மீட்கப்பட்டது(11.03.2021).

K-4 Anna Nagar Police team arrested Karthick kumar @ Escape Karthick and Bharath kumar @ Bharath for stealing gold jewels at Anna Nagar – 64 sovereigns of gold jewels worth about Rs.10,50,000/- was seized (11.03.2021).

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த நடராஜன், வ/52, என்பவர் 13.1.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.4 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன் மேற்படி திருட்டு சம்பவம் மற்றும் பல திருட்டில் ஈடுபட்ட 1. கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக், வ/32, பெங்களூரு 2. பரத்குமார் (எ) பரத், வ/39, பெங்களூரு ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம்(ரூ.10,50,000/- கைப்பற்றப்பட்டது. மேலும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

On the complaint preferred by Natrajan, M/52, of Anna Nagar that unknown persons break open the lock of his house on 13.01.2021 and stolen 8 sovereigns gold jewels, a case was registered in K-4 Anna Nagar PS. A team led by the Inspector of Police investigated the case with the help of CCTV footages and identified the accused as 1)Karthick kumar @ Escape Karthick, M/32 and 2)Bharath kumar @ Bharath, M/39 both from Bengaluru and arrested them. 64 sovereign gold jewels worth Rs.10,50,000/- were seized and legal action is being pursued against them.

Leave a Reply

Your email address will not be published.