உயிர் நீத்த காவலர்களுக்கு திருப்பத்தூரில் அஞ்சலி திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டார். தமிழகத்தில் வீரமரணமடைந்த 264 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் […]
Author: policeenews
கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கன்னிவாடி காவல் ஆய்வாளர் அவர்கள். 21.10.2020திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நெட்டியபட்டி, நடுப்பட்டி கிராமங்களுக்கு கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நேரடியாக சென்று கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது பற்றியும், இன்றைய […]
காவலர் வீர வணக்க நாள்- டிஜிபி திரிபாதி மரியாதை
சென்னை: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. காவலர் வீரவணக்க நாளான இன்று டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் […]
காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்
காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் சென்னை : வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் நேற்று வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் 1962ம் ஆண்டு முதல் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]
மதுரை மேலவளளவு காவல் நிலையத்தில், பணியாற்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது
மதுரை மேலவளளவு காவல் நிலையத்தில், பணியாற்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு காவல் நிலையத்தில் பணியாற்றிய கல்லம்பட்டியை சேர்ந்த காவலர் மகாராஜன் கொடிக்கம்பத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்தார்,அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு திடீரெனநெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 2002 பேட்ஜ் காவலர்கள் மூலம் ஒருங்கிணைந்து 18,47,500/− ரூபாயினை வழங்கினர்.
சிறைத்துறையில், பதவி உயர்வுக்கான நேர் காணல்
சிறைத்துறையில், பதவி உயர்வுக்கான நேர் காணல் தமிழக சிறைகளில் பணியாற்றும் முதல் நிலை காவலர், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான நேர் காணல் மதுரையில் இன்றும், நாளையும் நடப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்கள் மாவட்ட சிறைகள் என மொத்தம் 185 சிறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உதவி சிறை அலுவலர், சிறை அலுவலர், தலைமை காவலர்கள், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெறுகிறது, அதன்படி இந்த […]
மதுரை புற நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
மதுரை புற நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன மதுரை புறநகர் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு காவல் துறையினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் ரோல் கால் நேரம் காலை ஏழு மணி என்பது நடைமுறையில் இருந்தது. இதனால், போலீசார் பணிக்கு வருவதற்கு முன் அதிகாலையில் எழுந்து தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு […]
மதுரை தத்தநேரி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை தத்தநேரி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை, தத்தநேரி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செயது விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தத்தநேரி, பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தத்தநேரி ரயில்வே தண்டவாளம் அருகே பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்திருப்பதை கண்டனர், அப்போது அவர்களை விசாரிக்க […]
மதுரை, வில்லாபுரம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படு கொலை, மர்ம கும்பல் தப்பி ஓட்டம், போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, வில்லாபுரம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படு கொலை, மர்ம கும்பல் தப்பி ஓட்டம், போலீசார் தேடி வருகின்றனர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மகன் பாரதி வயது 22/2020, இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று (20/10/20) மதுரை, கீரைத்துரை B4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வில்லாபும், பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பழைய வீட்டில் பிளம்பிங் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். […]
காவலர்கள் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்த, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
காவலர்கள் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்த, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ஊரக உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் காவலர் குழந்தைகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து […]










