Police Department News

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் அவர்களின் NDTV தொலைக்காட்சி நேர்காணல் நாள் -12.06.2025

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் அவர்களின் NDTV தொலைக்காட்சி நேர்காணல் நாள் -12.06.2025 தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 12 ஜூன் 2025 அன்று NDTV செய்தி சேனலுக்கு ஒரு நேர்காணல் வழங்கினார். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்து பேசினார். அந்த நேர்காணலின் சாராம்சம் பின்வருமாறு: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு […]

Police Department News

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலியை செலுத்தி, அவர் தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். உரிய நிவாரணம் வழங்க அரசு எப்போதும் உறுதுணையாக உடன் நிற்கும். எதிர்காலங்களில் […]

Police Department News

சென்னை கிழக்கு மண்டலத்தில் குறை இருக்கும் முகாம்

சென்னை கிழக்கு மண்டலத்தில் குறை இருக்கும் முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், டாக்டர் P.விஜயகுமார், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 11 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Department News

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 11.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 48 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர்(தெற்கு), காவல் துணை ஆணையர்(வடக்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு […]

Police Department News

குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி

குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி தேன்கனிக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது.ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாகிய இரண்டு குழந்தைகளின் தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஷ் 43 இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]

Police Department News

போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி.

விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை:- போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி. அதிகாலை வேளையில் அரசு, தனியார் பேருந்து செல்லும் சாலையில் ஒருபுறம் லாரியை நிறுத்தி சரக்கு ஏற்றுவதும் இறக்குவதும் என்று பொது போக்குவரத்துக்கு இடையூறாக 1 மணி நேரத்திற்கு மேலாக நிற்கிறது. அவ்வழியாகச் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து தடைபடுகிறது. இந்த பகுதியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் இருக்கும் போது வாகனத்தை […]

Police Department News

மதுரையில் ஏடிஎம் திருடன் கைது

மதுரையில் ஏடிஎம் திருடன் கைது மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, திருமங்கலம் டவுன் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற நபரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றி அவரிடமிருந்து ATM கார்டை பெற்று அதற்கு பதிலாக வேறு ஒரு ATM கார்டு கொடுத்து பின்னர் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துள்ளார். இதை அறிந்த புகார்தாரர் கொடுத்த புகார் மனு அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு […]

Police Department News

தர்மபுரியில்
கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தர்மபுரியில்கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார். அதேபோன்று நேற்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் வாகன […]

Police Department News

மதுரை தாமரைப்பட்டி பகுதியில் நடந்த உலக மன சிதைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்

மதுரை தாமரைப்பட்டி பகுதியில் நடந்த உலக மன சிதைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் உலக மனச்சிதைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 24 அன்று அனுசரிக்கப்படுகிறது.  இந்த தினம், மனநலக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவும் நடத்தப்படுகிறது. கடந்த 24.05.2025 உலக மனச்சிதைவு தினம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , மதுரை புதூர் தாமரைத் தொட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி சிறப்பு […]

Police Department News

வெளி மாநிலத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள ரூபாய். 30 இலட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 2 எதிரிகள் கைது

வெளி மாநிலத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள ரூபாய். 30 இலட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 2 எதிரிகள் கைது இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இராணிப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார்வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட […]