Police Department News

பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தவறான செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு அறிவிப்பு

பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தவறான செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு அறிவிப்பு

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் மதுரையில் பிரபல ரவுடி வெள்ளை காளி குரூப்பைச் சேர்ந்த அஜய் பிரசன்ன குமார் என்ற ரவுடி வெட்டிக்கொலை என்று செய்தி வெளியானது

இந்த தவறான செய்தியின் மீது மதுரை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது கடந்த 12. 6. 2025 ஆம் தேதி அன்று அதிகாலை மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆரப்பாளையம் ஞானஒளிவு புரம் பகுதியை சேர்ந்த சண்முகம்
என்பவரது மகன் அஜய் பிரசன்ன குமார் வயது 24 என்பவர் நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக. அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இக்கொலை வழக்கு தொடர்புடைய மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு பகுதியைச் சேர்ந்த மூக்கையா என்பவரது மகன் சுந்தர் வயது 39 அவரது சகோதரன் சுந்தர்ராஜன் வயது 36 மற்றும் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாண்டியராஜன் வயது 26 ஆகியோரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய கம்பியை கைப்பற்றி விசாரணை செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

இந்நிலையில் இக் கொலை வழக்கு சம்பந்தமாக பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி மதுரையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் குரூப்பைச் சேர்ந்த அஜய் பிரசன்ன குமார் என்ற ரவுடி வெட்டிக்கொலை என்ற செய்தி வந்துள்ளது அதாவது கொலை செய்யப்பட்ட அஜய் பிரசன்ன குமார் என்பவர் எதிரி சுந்தர் என்பவரின் பழக்கடையில் வேலை செய்துள்ளார் அதிலிருந்து இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர் இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறினால் இக்கு கொலை நடந்துள்ளது மேலும் காவல்துறையினரின் விசாரணையில் அஜய் பிரசன்ன குமார் என்பவருக்கும் வெள்ளை காளி என்பவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.