மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் 24.05.2025 அன்று மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவலர்களுக்கு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நேரங்களில் […]
Month: May 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இன்று 24.05.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW), திரு.சிவராமஜெயன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் […]
தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர்
தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர் 23.05.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல்துறையில் பணிக்காலத்தின் போது காலமான, திரு. செல்லக்குமார், திரு.பரமசாமி, திரு. பிரவீன்குமார், திரு. விஜயக்குமார் ஆகிய காவலர்களின் வாரிசுதாரர்கள் நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை […]
மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு
மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு வரலாற்று சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, கடந்த 11.5.2025 அன்று பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டிருந்த இடையர்பட்டி காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பயிற்சி காவலர்களான திரு.சரண்ராஜ், திரு.சிந்தனைவளவன், திரு.சைமன் மற்றும் திரு.சந்திர பிரகாஷ் ஆகியோர் தங்களது பணியின் போது தல்லாகுளம் பெருமாள் கோவிலின் அருகில் […]
விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர்
விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை மாநகர் V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.ஆசிக் அகமது என்பவர், கடந்த 30.03.2025 அன்று நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது, வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்ப நலன் கருதி, இன்று (21.05.2025) காவலர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூபாய் 30 இலட்சத்திற்கான காசோலையை மதுரை மாநகர காவல் […]
மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர்
மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர் தமிழக காவல் துறையில் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை மாநகர ஆயுதப் படையில் பணிபுரிந்து மறைந்த காவலர் மோகன் குமார் பாலன் என்பவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த முப்பத்தி எட்டு மாவட்டங்களில் பணிபுரியும் 6728 காவல் நண்பர்கள் திரட்டிய உதவித்தொகை ரூ.22,18,300-/ ஆன காசோலைகளைமதுரை காவல் […]
திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு
திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கினார்.
மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு
மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு 21.05.2025 அன்று திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலைய பாலத்தின் அருகில், சாலையில் கிடந்த ரூபாய் 3 இலட்சம் ரொக்க பணத்தினை திரு.சுருளிவேல் என்பவர் எடுத்து, மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார். இவரது இந்த நேர்மையான செயலினை பாராட்டும் விதமாக […]
பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம்
பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம் மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி வயது 35 என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது இந்த வழக்கின் சாட்சிகளின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் […]
21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்
21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் கடந்த 02/02/2019 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டி […]