Police Department News

தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரபாண்யடியன் மகன் கனகராஜ் வயது (38) என்பவரை கடந்த 14.08.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு வைத்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்தும் அதை தடுக்கச் சென்ற கனகராஜின் தாயார் பார்வதி வயது(59) என்பவரை அரிவாளால் தாக்கியும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் மேலபாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த பூலோகப்பாண்டியன் மகன் 1) பாலகிருஷ்ணன் வயது (25), கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் 2) மகேந்திரன் (21), கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ரத்னவேல் பாண்டியன் மகன் 3) ரஞ்சித்குமார் (25), கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர்களான முருகேசன் மகன் 4) சிவபெருமாள் வயது 25 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் 5) சரவணக்குமார் வயது (21) ஆகிய 5 பேரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான பாலகிருஷ்ணன், ரஞ்சித்குமார் மற்றும் சிவபெருமாள் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் மேலபாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த 1) பூலோகப்பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன், கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த 2) ரத்னவேல் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார் மற்றும் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த 3) முருகேசன் மகன் சிவபெருமாள் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி மேற்படி எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.