Police Department News

திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி BEAT-III போலீசார் சந்திரசேகர் (கா எண்372)மற்றும் பிரசாத் (தா சி கா)ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது கணியாம்பூண்டி அருகே ராம்நகர் என்ற பகுதியில் இரண்டு மர்ம நபர்கள்

திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி BEAT-III போலீசார் சந்திரசேகர் (கா எண்372)மற்றும் பிரசாத் (தா சி கா)ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது கணியாம்பூண்டி அருகே ராம்நகர் என்ற பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென்று ஓடத்தொடங்கினார்கள் எனவே சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்கள் இருந்த இடத்தை அருகில் சென்று பார்த்தபோது எதிரே உள்ள கடையை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தது தெரிய வந்தது உடனே ரோந்து காவலர்கள் வெகு தூரம் ஓடி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அங்கேரிபாளையம் பாபு மற்றும் இடுவாம்பளையம் ஜீவா என்பது தெரிய வந்தது மேலும் அவர்கள் பல குற்ற வழக்குகளில் இடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இந்த சம்பவத்தில் இடுபட்டவர்களை பிடித்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ
கா.பா) அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published.