
காவலர்களுக்கென்று தமிழக அரசு காவலர் தினம் அறிவிக்க வேண்டும்” – சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை

சென்னை, அம்பத்தூர்:
தமிழகம் முழுவதும் காவலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், காவல் நல கவுன்சில், அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் இ நியூஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து, சென்னை அம்பத்தூர் பகுதியின் துணை ஆணையராக பணியாற்றி வரும் ஐமன் ஜமால், IPS அவர்களிடம் ஒருங்கிணைந்த மனுவை வழங்கின.
இந்த மனுவின் மூலம், காவல்துறையின் சேவையை பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தும் வகையில், வரும் ஜூலை 24, 2025 அன்று “காவலர் தினம்” என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அதை அரசு மற்றும் மாவட்ட அளவிலும், மாவட்ட காவல்துறை தலைமையகங்களிலும் விழாக்களாகக் கொண்டாட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், காவலர்களின் மகிழ்ச்சி, நலன் மற்றும் மனநல பராமரிப்புக்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு வழங்கும் நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையை ஆதரிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காவல்துறையின் தொடர்ச்சியான சேவை மற்றும் தியாகத்திற்கு நன்றி தெரிவித்து, சமூக நலத்திற்கான காவலர்களின் பங்களிப்பு பெருமைக்குரியது என அவர்கள் தெரிவித்தனர்.
மனுவை பெற்ற துணை ஆணையர் ஐமன் ஜமால், IPS அவர்கள், “காவல்துறை மற்றும் மக்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் இம்முயற்சி பாராட்டத்தக்கது. காவல்துறையின் பணியைப் புரிந்துகொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நம் சமூகத்திற்கு அவசியமானவை” எனக் கூறினார்.
