
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய சரகம் ஆனந்தபுரம் கூட்ரோடு ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேற்படி கூட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு, குழந்தை திருமண தடுப்பு முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றின் மீதான சட்டப்படியான நடவடிக்கை விபரங்கள், இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது…
மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் திரு.இளமுருகன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சத்தியசீலன் சமூக நீதிகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் ஆய்வாளர் திரு.ரத்ன சபாபதி,
திரு.ராஜசேகர் உதவி ஆய்வாளர் இணையவழி குற்ற தடுப்புபிரிவு ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கூடத்தில் child help line 1098, women help line 181, cyber crime 1930 மற்றும் காவல் உதவி செயலி பதிவிறக்கம் பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது.
