போலீஸ் ஏட்டு தற்கொலை முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி 42, பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார். நேற்று பணியில் இருந்தபோது நண்பரிடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு சென்று வருவதாக கூறினார். பின் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூர்த்தி உடலை போலீசார் கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
Police Recruitment
மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியல்
மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வடபுறம் சர்ச் தெரு, எதிர்புறம் 7 தெருக்களும் உள்ளன. இதில் இரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர்.நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ச் தெரு பகுதியில் சில இளை ஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியில் 7-வது தெருவை சேர்ந்த இளை ஞர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு மதுபாட்டில் களை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பு […]
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு […]
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க நீதிமன்றம் புதிய கால அவகாசம் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது இருப்பிடம் இந்த கால அவகாசத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக விருதுநகர் மாவட்டத்தில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர் இதில் விருதுநகரில் 11 வழக்குகள் சிவகாசியில் மூன்று வழக்குகளும் அருப்புக்கோட்டையில் 6 வழக்குகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எட்டு வழக்குகளும் திருச்சுழியில் […]
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், ஆவரம்பட்டி அருகே அழகுத்தேவன் குளத்தைச் சோ்ந்த குருசாமி ராஜா மகன் சிவக்குமாா் (43). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்தாா். இந்த நிலையில், சிவக்குமாா் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி ( 23 ) மகன் குருசரன் ( 4) ஆகிய மூன்று பேரும் தெற்கு வெங்கநல்லூா் ஊராட்சி இ. எஸ். ஐ. குடியிருப்பு அருகேயுள்ள […]
தீபாவளி பண்டிகை நாட்களில் பணியாற்றிய நெகிழ்ச்சி மதுரை மாநகர் போலீசார்
தீபாவளி பண்டிகை நாட்களில் பணியாற்றிய நெகிழ்ச்சி மதுரை மாநகர் போலீசார் மதுரை மாநகர் போலீசார் எல்லா குடும்பங்களும் மனம் மகிழ்ந்து பட்டாசு புத்தாடை விருந்து என அனுபவித்து தீபாவளி கொண்டாடும் வேளையில் கடமையென வந்தால் அத்தகைய கொண்டாட்டங்களை ஒதுக்கிவைத்து பணியாற்றுவோர் உள்ளனர். ஆனால் போலீசர்க்கு நல்ல நாள் பண்டிகை நாள் என்றெல்லாம் கிடையாது. எப்போதும் மக்கள் சேவையில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இந்த பணியை விரும்பி ஏற்றதால் விழாக்காலங்களில் பணிபுரிவதும் மகிழ்ச்சி.
மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது
மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது மதுரைதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நகரின் அடையாளத்தையே மாற்றியுள்ளது.நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை ஒரே […]
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார்.
பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்.
பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல். மதுரைதீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதை கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு […]
பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி மதுரை மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயங்களால் மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் தனியார் மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.மதுரை அரசு ராஜாஜி […]