மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, B.Ed.அவர்கள் முன்னிலையிலும் காவல் ஆய்வாளர் B. சிவக்குமார் B.B.A. அவர்கள் ஒருங்கிணைப்பில் திறந்து வைக்கிறார்.
குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் திருவெரும்பூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரவிக்குமார் என்பவரது டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் காட்டூரில் உள்ள காளியம்மாள் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் […]
கோவை சம்பவம் திருச்சியில் இருவர் வீட்டில் அதிரடி சோதனை – நான்கு சிம் கார்டுகள், ஒரு செல்போன் பறிமுதல் கோவை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரணை வளையத்திற்குள் உள்ள நபர்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில், திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் […]
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயதப்படை காவலர் குடியிருப்பு தூத்துக்குடி 3-வது மைல் அருகில் உள்ளது. இங்கு 392 குடியிருப்புகள் உள்ளன. ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். மேலும் குடும்பத்தார் அனைவரும் அங்கு குடியிருந்து வருகின்றனர். ஏற்கெனவே குடியிருப்புகளின் நுழைவாயிலில் கரோனா தடுப்பு […]