நேர்மை மிகு சிறுவர்கள், பாராட்டி பரிசு வழங்கிய காவல் ஆய்வாளர் கடையம் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவர்களான தர்மர் என்பவரின் மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி என்பவரின் மகன் பாலாஜி ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த 100 ரூபாயை எடுத்து அதனை உடனடியாக கடையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் சிறு வயதிலேயே நேர்மையாக செயல்பட்டு காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் […]
Day: June 22, 2025
சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவல் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.செந்தில் வடிவு மற்றும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோரின் தகுந்த புலன் மூலம் முன்தகவல் பெற்று நுண்ணறிவுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து துரித நடவடிக்கை எடுத்தமைக்காக பாராட்டினார்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு கூட்டம்
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு கூட்டம் 20.06.2025 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம்
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்,IPS., அவர்கள் தலைமையில் காகுப்பம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்திரு.ஞானவேல், காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்