Police Department News

10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது

நாகபட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் திட்டச்சேரி சாலையில் சென்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்று திட்டச்சேரியை அடுத்த கொந்தை பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் சுமார் ரூ.1½ […]

Police Department News

வேறொருவரை காதலித்ததால் ஆத்திரம் காதலியை கற்பழித்த நபர்

சென்னை: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சாலையோரமாக மின் விளக்குகள் எதுவும் எரியாமல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் இளம்பெண் ஒருவர், ஆடைகள் கிழிந்த நிலையில் கதறி அழுதபடி இருந்தார். அவருக்கு அருகில் 2 வாலிபர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர். காவல்துறையினரை கண்டதும் காரில் […]

Police Department News

தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிக்கு தேசிய விருது

மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கபீப். தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் மழுநேர பணியில் இறங்கி நிர்வாகத்தை சிறப்பாக செயலாற்றினார். இதனால் இவரை கௌவரவிக்கும் வகையில் சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தை திறம்பட கவனித்தார் என்ற வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘கபீப்’புக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் […]

Police Department News

திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (22). இவர் சென்னை ஆயுதப் படையில் பணிபுரிகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்தார். அவரிடம் திருமண ஆசை காட்டி நெருங்கி பழகினார். இதற்கிடையில், செல்வக்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதுபற்றி தெரியாத மாணவி, தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் அவரையும் செல்வக்குமார் திருமணம் செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மாணவியைப் பார்க்க […]

Police Department News

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு காவல்துறையின் ஆலோசனைகள்

பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதும், அவற்றை தடுக்கவரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்களை கேள்விப்பட்டு வருகிறோம். மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் […]

Police Department News

காவலர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்கள்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவலைச் சேர்ந்த காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா. விசுவநாதன் IPS. அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக 141 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மொத்தம் 12 போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். ஆண்கள் பிரிவில்: 1.கால்பந்து (FOOT BALL) -FIRST PLACE. 2.ஆக்கி (HOCKEY) -SECOND PLACE. […]

Police Department News

விழாக்காலங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு காவல்துறையின் ஆலோசனைகள்

சென்னை: பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதும், அவற்றை தடுக்கவரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்களை கேள்விப்பட்டு வருகிறோம். மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் […]

Accidents

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் உதவி-ஆய்வாளர் பரிதாபமாக சாவு

ஈரோடு: பவானி அருகே உள்ள பெருமாள்கரடை சேர்ந்தவர் திலகன் (52). இவர் சத்தியமங்கலம் அருகே கெஞ்சனூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து வேலை விஷயமாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக கொண்டையம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள காந்திநகருக்கு […]

Police Department News

தம்பிக்கு வைத்த குறி அண்ணன் உயிரைப் பறித்தது: ஐஸ் ஹவுஸ் இளைஞர் கொலையில் குற்றவாளி கைது

நான்கு நாட்களுக்கு முன்னர் ஐஸ் ஹவுஸில் நடந்த கொலை சம்பந்தமாக குற்றவாளி பிடிபட்டார். தம்பியை கொலை செய்ய நடந்த முயற்சியில் அண்ணன் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை திருவெல்லிகேணி கஜபதி தெருவைச் சேர்ந்தவர் முனியன்(24). ஆட்டோ ஓட்டுநர். சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 13-ம் தேதி மாலை 3 மணி அளவில் முனியன் ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலை வழியாக ராம் நகரில் 8-வது தெரு பகுதியில் தன்னுடைய […]

Police Department News

திண்டுக்கல்லில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு கொலை வழக்கில் 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஷ் என்ற விக்கி (21). இவருக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. இவர் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ் கடையில் இருந்தபோது அங்குவந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]