Police Department News

சென்னையில் கொடூரம்: ஐ.டி. பெண் ஊழியரை தாக்கி வழிப்பறி; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஈசிஆர் சாலையில், ஆந்திர மாநில ஐடி பெண் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கி , அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, விலை மதிப்புள்ள ஐ போன் பறிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]

Police Department News

நீலாங்கரையில் தந்தையை கொலை செய்த மகன் கைது

நீலாங்கரையில் குடும்பத்தகராறில் மகன் தாக்கியதில் தந்தை பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து மகனை போலீஸார் கைது செய்தனர். சென்னை, நீலாங்கரை, ராஜேந்திரா நகர், வசித்து வந்தவர் முருகேசன்(60). கடந்த 07-ம் தேதி அன்று இரவு தனது தனது மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்துள்ளார். கோபத்தில் மனைவியை தாக்கியுள்ளார். தாயை அடித்ததால் மகன் திருவேங்கடம் தந்தை முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திருவேங்கடம் தனது தந்தை முருகேசனை கையால் தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த முருகேசன் […]

Police Department News

பள்ளிக்கரணையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி கைது

ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள சொத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரிக்க உடந்தையாக இருந்த பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் சிதம்பரம். இவரது தந்தை சொக்கலிங்கம். இவர்களுக்கு சொந்தமாக பள்ளிக்கரணையில் உள்ள காமகோடி நகரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 3352 சதுர அடி காலி இடம் உள்ளது. இடத்தின் உரிமையாளர் சொக்கலிங்கம் 1995-ம் ஆண்டு இறந்தார். அதன் பிறகு, கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை பத்திர பதிவு […]