ஆஸ்திரேலிய நாட்டில் அழிந்து வரும் இனமான பச்சைக் கிளிகள் இனப்பெருக்கத்திற்காக, ஒசூர் அருகேயுள்ள அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது 11 கிளிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், ஒசூர் வனப்பகுதியின் சூழலை தாங்கி பல்கிப் பெருகினால் தொடர்ந்து கிளிகளை அதிக எண்ணிக்கையில் விட வனத்துறை முடிவு செய்துள்ளனர்.
Day: February 20, 2018
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரிடம் காவல் ஆணையர் நலம் விசாரிப்பு: தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி
கொள்ளையர்களின் தாக்குதலால் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் லாவண்யா ஜனத் (30). ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் பணி முடிந்து கடந்த 13-ம் தேதி இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் […]
பெண் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் கைது
தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்போரூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அப்புமுருகன்(26) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி(35). இவருக்கும் திருப்போரூரை அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்துவேறு பாடு காரணமாக கணவர் செல்வத்தை துளசி பிரிந்து சென்று, பெருங்களத்தூர் […]
நாமக்கல் மாவட்டம் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் & போலீஸ் இ நியூஸ் சார்பில்
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்குரூ5000 கற்கும் இரண்டு havells fan நன்கொடை யாக வழங்கப்பட்டது மாவட்டத் தலைவர் டாக்டர் கே.சிவக்குமார் வழங்க பள்ளி யின் தலைமை ஆசிரியை பெற்றுக்கொள்ள உடன் ரிப்போர்ட் ட்ராக இணைய உள்ள டாக்டர் ஜெர்மன்.சண்முகசுந்தரம் மற்றும் எஸ்.சரவணன்
விருதுநகர் மாவட்டம் டீசல் கொள்ளையர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வாகனங்களில் தொடர் டீசல் திருட்டு சம்பவம் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட டீசல் கொள்ளையர்களைகையும் களவுமாக பிடித்தார் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் திரு.ராமசந்திரன் அவர்கள் இவை மட்டும் அல்லாது இவர் குற்றபிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும்போது பல குற்றங்களை கண்டுபிடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும் வெகுமதியும் பெற்றவர், மேலும் குற்றவாளிகளுக்கு மத்தியில் பெயரை கேட்டால் சிறிது நடுக்கம் காரணம் சிம்ம […]