Police Department News

பாலக்கோட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பாலக்கோட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கோடு போலீஸ் நிலையம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஸ்தூபி மைதானம், கடைத்தெரு, பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், தக்காளி மண்டி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் […]

Police Department News

அருப்புக்கோட்டை காந்திநகர் பாலத்திற்கு கீழ் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி Asp அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காந்திநகர் பாலத்திற்கு கீழ் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி Asp அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன், நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்வேல் மற்றும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜோதிமுத்து அவர்களும் கலந்துகொண்டார். மேலும் மரக்கறுகள் நடும் நிகழ்ச்சியில் நகர் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.செல்லதுரை, திரு.மோகன், காவலர்கள் என பலரது […]

Police Department News

செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த குருத்திகா

செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த குருத்திகா .தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து குருத்திகா, வினித்தின் வீட்டில் […]

Police Department News

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது35). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமங்கலம் தெற்குதெருவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறுமி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி […]

Police Department News

“சாலை விதிகளை மதித்து விலைமதிப்பில்லா உயிரை காப்போம்”விழிப்புணர்வு முகாமில் சிறப்பு விருந்தினராக திரு.R.சக்திவேல் (போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் தெற்கு )அவர்கள் மற்றும் திரு.ரவிச்சந்திரன் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது.

“சாலை விதிகளை மதித்து விலைமதிப்பில்லா உயிரை காப்போம்”விழிப்புணர்வு முகாமில் சிறப்பு விருந்தினராக திரு.R.சக்திவேல் (போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் தெற்கு )அவர்கள் மற்றும் திரு.ரவிச்சந்திரன் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட 200 அடி ரேடியல் சாலையில் உள்ள “Green Acres” குடியிருப்போர் நல சங்கம், துரைப்பாக்கம் வணிகர் சங்கம் மற்றும் துரைப்பாக்கம் Auto and Call Taxi ஓட்டுநர் சங்கம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சாலை […]

Police Department News

மதுரையில் சொத்து தகராறில் பெண் அடித்துக்கொலை- மகன் கைது

மதுரையில் சொத்து தகராறில் பெண் அடித்துக்கொலை- மகன் கைது மதுரை மேலக்குயில்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பம்பையா. இவரது மனைவி சிந்தாமணி(வயது 75). இவர் தனது 2 மகன்கள் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார். சிந்தாமணியின் 2-வது மகன் வேந்தன்(50). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் சிந்தாமணி வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து […]

Police Department News

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர் மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோச்சடை-மேலக்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள் வந்தது. […]

Police Department News

மதுரையில்கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு

மதுரையில்கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ரமேஷ் கண்ணன்(வயது36). இவர் நேற்று தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூர் சாலையில் உள்ள செம்புகுடிபட்டி கால்வாய் பாலத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 4 மர்ம நபர்கள் இறங்கி வந்து ரமேஷ் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் […]

Police Recruitment

திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீட்டில் நகை- பணம் திருடிய மருமகன் கைது

திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீட்டில் நகை- பணம் திருடிய மருமகன் கைது மதுரை திருப்பரங்குன்றம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் யாரோ மர்மநபர் பின்பக்க கதவை உடைத்து புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது …

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது … அதியமான் கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தர்மபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திரு. ரங்கசாமி, காவல் உதவி […]