மதுரையில் ரூ. 18 லட்சம் மோசடி; தம்பதி மீது புகார் மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் ஒத்தக்கடை போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சாம்சன்பால் தன்னிடம் உள்ள காரை கொடுப்பதாக கூறி ரூ. 18 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி சக்திபிரியா, உறவினர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். […]
Day: December 31, 2022
மேலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
மேலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாவினிப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த […]
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டு நீரேத்தான் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் புகுந்து சன்னதிக்கு முன்புள்ள உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து தப்பினார். அவர் மஞ்சள் டி-சர்ட், ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்தார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் துணியால் மறைத்திருந்தார். அவர் உண்டியலை உடைத்து […]
வாகனம் மோதி இளம்பெண் சாவு
வாகனம் மோதி இளம்பெண் சாவு மதுரை-திருச்சி 4 வழிச்சாலை கூத்தப்பன்பட்டி பகுதியில் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று இரவு நடந்து சென்ற இளம்பெண் மீது நாகர்கோவிலில் இருந்து திருச்சி சென்ற மினி வேன் மோதி சென்றது. இதில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். அந்த இடத்தில் நிற்காமல் சென்ற மினி வேன் டிரைவர் திருச்சி முண்டூரை சேர்ந்த இருதயராஜ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் […]
20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக டிஜிபி Dr.அபாஷ்குமார்,IPS நியமிக்கப்பட்டுள்ளார் ஊர்க்காவல் படை தலைமை கமாண்டண்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர […]