Police Department News

மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சியின் மூலமாக அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடுகளை சாலைகளில் விடுவதை தவிர்க்க முறையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு […]

Police Department News

முசிறியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பாக்கு புகையிலை பறிமுதல்

முசிறியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பாக்கு புகையிலை பறிமுதல் திருச்சி மாவட்டம். முசிறி அருகே காமாட்சிபட்டி என்ற கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பாக்கு மற்றும் போதை புகையிலை கடத்தப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜி, சக்திவேல், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காமாட்சிபட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து லோடு ஆட்டோவிற்கு […]

Police Department News

மதுரை டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய 2 பேர் கைது

மதுரை டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய 2 பேர் கைது மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் காசிமாயன் (வயது 53). இவர் பேச்சியம்மன் படித்துறை, ஆறுமுச்சந்தியில் உள்ள டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காசிமாயன் சம்பவத்தன்று இரவு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மதுபானம் வாங்கினார்கள். இதற்கான பணத்தை அவர்கள் தரவில்லை. எனவே காசி மாயன் தட்டி கேட்டார். அப்போது அந்த கும்பல் மாமூல் கேட்டு மிரட்டியது. இதற்கு அவர் […]

Police Department News

பாலக்கோடு அருகே தலைமுடி மாடலாக வெட்டிய பள்ளி மாணவன்- தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம்

பாலக்கோடு அருகே தலைமுடி மாடலாக வெட்டிய பள்ளி மாணவன்- தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதப்பன் இவரது மகன் நித்திஷ்(15) கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார் . அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவன் தலைமுடி மாடலாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான். படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை ஆனால் தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு […]

Police Department News

தருமபுரி : புதிய காவல்துறை கண்காணிப்பாளர்.

தருமபுரி : புதிய காவல்துறை கண்காணிப்பாளர். தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தகலைச்செல்வன் அவர்கள் நாமக்கல்மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்டீபன் ஜேசுபாதம் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Police Department News

ரெயில் விபத்தை தடுத்த வாலிபருக்கு பாராட்டு

ரெயில் விபத்தை தடுத்த வாலிபருக்கு பாராட்டு சமயநல்லூர் – கூடல்நகர் பிரிவு ரெயில் பாதை அருகே, சுந்தரமகாலிங்கம் மகன் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி காலை 8 மணியளவில் வெளியே சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள ரெயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தண்டவாளத்தை செல்போனில் போட்டோ எடுத்து, ரெயில்வே கேட் ஊழியர் பீட்டர் என்பவருக்கு அனுப்பி வைத்தார். அதனைப் பார்த்த பீட்டர், […]

Police Department News

திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை

திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலைதிருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ராதா. இவர் வீட்டில் ஒரு பெண்மணி இருந்துள்ளார். நேற்று இவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து நகைகள் 4 சவரன் திருடு போய் உள்ளது. இவரது மகன் ரஜினி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடன் இருந்த பெண்ணை காணவில்லை […]

Police Department News

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக கார்த்திகேயன் பொறுப்பேற்பு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன், இன்றைய தினம் (04.01202) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கடத்த ஒன்றரை ஆண்டுகளாகவும் அதற்கு முன்பு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராகவும் மிக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மேலும் கோவை சரக காவல்துறை துணைத்தலைவராகவும் 2016-ம் ஆண்டில் பணியாற்றியுள்ளார்.மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை […]

Police Department News

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடக்கம்

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடக்கம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடக்கம்ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் சோதனை சாவடி காவிரி பாலம் ஓயாமரி செல்லும் எண்.5 அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், திருச்சி காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை-திருச்சி செல்லும் தேசியநெடுஞ்சாலை, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Y ரோடு ஜங்சன் பகுதியில் காவல் சோதனை சாவடி எண்.5 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது. […]

Police Department News

தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்

தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர் மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர். பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி […]