Police Department News

Google Meet செயலி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் காவல்துறை துணைத்தலைவர்.

Google Meet செயலி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் காவல்துறை துணைத்தலைவர். திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பாலகிருஷ்ணன்.¸ இ.கா.ப அவர்கள் ஊரடங்கு காலத்தில் புகார் தெரிவிக்க இயலாத பட்சத்தில் Google Meet செயலி மூலம் பொதுமக்கள் தன்னை தொடர்பு கொண்டு¸ குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்தார். தற்போது Google Meet செயலி பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். மேலும் விபரங்களுக்கு 0431-2333909 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Police Department News

மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் பகுதியில் பயங்கரமான கூட்டுக்கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டது

மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் பகுதியில் பயங்கரமான கூட்டுக்கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டது மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் B.6.காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்புரம் ஜீவா நகர் முதல் தெருவில் சந்தேகத்திற்குறிய சில நபர்களின் நடமாட்டம் இருப்பதாக B.6.காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆய்வாளர் பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்களுடன் ஜீவா நகர் முதல் தெருவிற்கு சென்றார் அங்கே சந்தேகப்படும்படி ஆறு நபர்கள் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் […]

Police Department News

திருவாடானையில ரூபாய் 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 9 பேர் கைது..!!

திருவாடானையில ரூபாய் 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 9 பேர் கைது..!! திருவாடானை அருகே 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் தங்க பிஸ்கட்டுகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தொண்டி அருகே உள்ள வீர சங்கிலி மடத்தில் செம்மரக்கட்டைகள் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதுகுறித்து கிடைத்த […]

Police Department News

சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்கு பாராட்டு

சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்கு பாராட்டு. 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் முகேஷ் குமார் என்பவர் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த ரூ.40,000/- பணத்தை தவிரவிட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணம் தொலைந்த 15 நிமிடத்தில் […]

Police Department News

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள்.

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர்கள் உமாமகேஸ்வரி மற்றும் அபிதா ஆகியோர் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து, பின் அவரிடம் முகவரி கேட்டறிந்து தனது வாகனத்தில் மூதாட்டியின் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு சேர்த்தார்கள். பெண் காவலர்களின் செயலுக்கு […]

Police Department News

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர். அவ்வகையில் ஸ்டேன்ஸ் ஐ. சி. எஸ். இ மற்றும் சி.எஸ்.அகாடமி பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றிணைந்து மற்றும் குடும்பத்தார் நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல்துறை […]

Police Department News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் அருகில் உள்ள கடையில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் வேலையிழந்த பெண் தன் தாயின் மருத்துவ செலவிற்கும்¸ சாப்பாட்டிற்கும் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு.

கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு. சென்னை பெருநகர காவல்துறையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய வாகன சுற்று காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ச.அருணாச்சலம் என்பவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து 18.05.2020-ம் தேதி பணிக்கு திரும்பினார் அவரை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் பணிக்கு […]

Police Department News

மதுரை, செல்லூர், D2, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல்

மதுரை, செல்லூர், D2, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியை சேர்ந்த D.2, காவல் நிலைத்தில் பணி புரியும் சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் அவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தத்தநெறி, கனேஷ்புரம் பகுதியில் சந்துரு, (33), பாண்டி(35), ரமேஸ்(28) ஆகியோர் ஊரடங்கு உத்தரவிற்கு எதிராகவும், நோய் தடுப்புக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதால் அவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் களைந்து செல்லும்மாறு கூறினார் […]

Police Department News

மனம் நெகிழ வைத்த காவல் கண்காணிப்பாளர்

மனம் நெகிழ வைத்த காவல் கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்களை கௌரவிக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் இ.கா.ப அவர்கள் சால்வை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.