Police Department News

சென்னை மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு!

சென்னை மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு! காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர் தமிழகம் முழுவதும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது பொங்கல் பண்டிகையின் இறுதி நிகழ்வான காணும் பொங்கலன்று பொது இடங்களில் மக்கள் குவிந்தனர் காணும் பொங்கலன்று தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர் சென்னை கடற்கரைகளில் மட்டும் சுமார் 1,200 […]

Police Department News

மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம், “தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட […]

Police Department News

மதுரை வாடிப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை வாடிப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் […]

Police Department News

மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது மதுரை ரெயில் நிலைய முன்பு திலகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும் வகையில் கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார். அந்த ஆட்டோவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா (36), தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான் (22) […]

Police Department News

போலி உரிமம் மூலம் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்த பலே கில்லாடி சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போலி உரிமம் மூலம் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்த பலே கில்லாடி சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்க உரிமம் வாங்கி தருவதாக கூறி போலியாக உரிமம் தயாரித்து ரூ.2,82,50000 ஏமாற்றியவர் கைது.சென்னையை சேர்ந்த திரு எம் எஸ் ராஜேந்தர் என்பவரிடம் சென்னை முகப்பரை சேர்ந்த தற்சமயம் மும்பையில் வசித்து வரும் பிரதி ஆ/ வ த/ பெ ராதாகிருஷ்ணன் என்பவர் […]

Police Department News

பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில் மோட்டார்சைக்கிள் மீது சரக்குவாகனம் நேருக்கு நேர் மோதியதில் 1 வயது குழந்தை பலி, தந்தை உட்பட 3பேர் படுகாயம்.

பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில் மோட்டார்சைக்கிள் மீது சரக்குவாகனம் நேருக்கு நேர் மோதியதில் 1 வயது குழந்தை பலி, தந்தை உட்பட 3பேர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.இன்று காலை செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் 3 குழந்தைகளுடன் கரகத அள்ளியிலிருந்து பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார், கரகதஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருப்பத்தில் சென்ற […]

Police Department News

பாலக்கோட்டில் ஒன்பது இடங்களில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு.
966 மதுபாட்டில்கள் பறிமுதல் .

பாலக்கோட்டில் ஒன்பது இடங்களில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு.966 மதுபாட்டில்கள் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் விடுமுறை என்பதால் அரசு மது பாட்டில்களை பதுக்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து களத்தில் இறங்கிய டி.எஸ்.பி சிந்து அவர்கள் மூங்கப்பட்டி தாபா , தளவாய்அள்ளி, தக்காளிமண்டி, குத்தலஅள்ளி, இரயில்வேகேட், […]

Police Department News

பாலக்கோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கண் சிகிச்சை முகாம்.

பாலக்கோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கண் சிகிச்சை முகாம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் கண் பரிசோதனை முகாம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைப்பெற்றது.இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி கலந்துகொண்டு கண்பரிசோதனையை முகாமை துவக்கி வைத்தார்,இதில் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டிராவல் ஓட்டுநர்கள், […]

Police Department News

மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்’ செய்த 10 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்’ செய்த 10 பேர் கைது மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெக நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். சொக்கிகுளம், வல்லபாய் மெயின் ரோட்டில் […]

Police Department News

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் பலி

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் பலி திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது டி. கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார். இரவு பணி என்பதால் டி.கல்லுப்பட்டி செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லுப்பட்டிக்கு சென்றுள்ளார். பஸ்சில் இடமில்லாததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார். அந்த பஸ் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியை அடுத்த […]