Police Department News

பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா?

பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா? பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவை சேர்ந்தவர் பேராசிரியர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் வயது 52 இவரது வீட்டில் 56 பவுன் நகைகள் திருடு போனது. இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. […]

Police Department News

மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் 800 மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் 800 மது பாட்டில்கள் கடத்தியவர் கைது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. மீனாட்சி அம்மன் கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கிய ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இதே பகுதியை சேர்ந்த […]

Police Department News

தஞ்சாவூர் மாவட்டத்தில் குட்கா, விற்பனை; 109 கடைகளுக்கு சீல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குட்கா, விற்பனை; 109 கடைகளுக்கு சீல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்டு 109 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம் அளிக்காததாலும், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார். அதன் படி தஞ்சை வடக்கு வீதியில் […]

Police Department News Police Recruitment

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பெண் தலைமை ஆசிரியர் கொடூரமான முறையில் கொலை போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பெண் தலைமை ஆசிரியர் கொடூரமான முறையில் கொலை போலீசார் விசாரணை திருப்பத்தூர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் ரஞ்சிதம் (வயது 52)புதன்கிழமை இவர் பள்ளிக்கு வராததை அறிந்த சக ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது இவர் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

பாலக்கோடு அருகே குடும்ப பிரச்னையில் 2 குழந்தைகளுடன் தாய்
கிணற்றில் விழுந்து தற்கொலை

பாலக்கோடு அருகே குடும்ப பிரச்னையில் 2 குழந்தைகளுடன் தாய்கிணற்றில் விழுந்து தற்கொலை தர்மபுரி மாவட்டம்,மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் இவரது மனைவி லட்சுமி (27)இவர்களுக்கு பிரசாந்த் (4) லதா (6மாதம் பெண் குழந்தை இருந்தனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால் மனமுடைந்த காணப்பட்ட லட்சுமி இன்று காலை தனது இரு குழந்தைகளுடன் அவர்களுடைய விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த […]

Police Department News

நாட்டு நலப்பணி திட்டத்தில் புதிதாக இணைந்த மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினர்

நாட்டு நலப்பணி திட்டத்தில் புதிதாக இணைந்த மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினர் 07.09.22 அன்று மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் தியாகராசர் நன்முறை பள்ளியில்… புதிதாக நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்த மாணவர்களுக்கு,, போக்குவரத்து மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட NSS பொறுப்பாளர்கள். அனைவரும் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரையில் பூட்டிய வீட்டில் 12 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள், ரூபாய் 45 ஆயிரம் திருட்டு!!சுப்ரமணியபுரம் போலிசார் விசாரணை

மதுரையில் பூட்டிய வீட்டில் 12 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள், ரூபாய் 45 ஆயிரம் திருட்டு!!சுப்ரமணியபுரம் போலிசார் விசாரணை மதுரை மாநகர் பகுதி, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட, அழகப்பன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்த சரவணன் வயது 39/22 இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார்.இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள். வீட்டினுள்புகுந்து அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் தங்கநகை வெள்ளி பொருள் 0.180கிராம் மற்றும் ௹பாய் […]

Police Department News

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். உயர்திரு பத்ரி நாராயணன் IPS அவர்களின் புதிய உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். உயர்திரு பத்ரி நாராயணன் IPS அவர்களின் புதிய உத்தரவு அரசு வாகனம் தவிர வேறு எந்த வாகனத்திலும் காவலர், மற்றும் ஊர்க்காவல்படையினர், பொதுமக்கள் எவரும் Police sticker ஒட்டக் கூடாது. மீறினால் அபராதமும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார் வாகனங்களில் Police sticker ஏற்கனவே ஒட்டயிருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினார்

Police Department News

காவலரின் உடலை தோளில் சுமந்து சென்ற டிஐஜி-நெகிழ்ச்சி நிகழ்வு

காவலரின் உடலை தோளில் சுமந்து சென்ற டிஐஜி-நெகிழ்ச்சி நிகழ்வு திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பலையூர் மேடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராமகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் 2017 ஆம் ஆண்டு கான்ஸ்டபிள் ஆக பணியில் சேர்ந்த ராமகிருஷ்ணன் திருச்சி மாவட்டம் வாத்தலை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பெட்டவாய்த்தலையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் பணி முடிந்து அதிகாலை வீடு திரும்பினார். நேற்று காலை 10:30 மணியளவில் பணிக்கு […]

Police Department News

ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு அலங்காநல்லூர் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா(24). ரவி கடந்த ஒரு வருடமாக கோவில்பாப்பாக்குடியில் வசித்து வந்தார். அவர் அங்கு சிலருடன் நட்பாக பழகி வந்தார். இந்த […]