இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவிற்கு வந்த இரகசிய தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் சார்பு-ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. உளவுத்துறையின் உதவியோடு, தனிப்படை சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மேலும் கூடுதலாக மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்திய பிரத்யேக கைபேசி எண் 9489919722-ல் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 11.11.2019-ம் தேதி சார்பு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட […]
Day: November 12, 2019
காசி மேட்டை கலக்கும் சிவகங்கை காரர், திரு. சிதம்பரமுருகேசன் ஆய்வாளர் அவர்கள்.
இன்ஸ்பெக்டர் இடமாற்றம்; கலங்கிய பெண்கள்! – மக்கள் மனதில் இடம்பிடித்த ஆய்வாளர் சிதம்பரமுருகேசன் அவர்களின் சீக்ரெட் காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்’ எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால்,காசிமேடு இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசனை இடமாற்றம் செய்யக்கூடாது’ என அப்பகுதி பெண்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. `அப்படி என்னதான் சாதித்தார் சிதம்பர முருகேசன்?’ என சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கேட்டோம். “இரவு நேரங்களில் […]
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவ தலைமுடியை வழங்கிய பெண் போலீஸ் அதிகாரி
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் அபர்ணா லவக்குமார். இவர் திருச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் மூத்த சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நெருக்கடியான வேலைகளுக்கு இடையேயும் இவர் பள்ளி மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு பள்ளிக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்புக்குள்ளான 5-ம் வகுப்பு மாணவனை அபர்ணா சந்தித்தார். அப்போது அந்தச் சிறுவன் புற்றுநோய்க்கான ‘கீமோதெரபி’ சிகிச்சையால் தலைமுடி முழுவதையும் இழந்திருப்பதைப் பார்த்தார். இதைத் தொடர்ந்து அபர்ணா, தனது நீண்ட தலைமுடியை […]
மண்டபம் அருகே ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளுடன் இலங்கை அகதி கைது!
இலங்கை மன்னார் மாவட்டம் பதினாறாம்கட்டை சித்திரை குமார் மகன் முரளிதரன் (எ) அருண் (24). அகதியாக தமிழகம் வந்த அருண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அவரது உறவினரை சந்திக்க இன்று காலை வந்த இவர், மண்டபம் அருகே சுடுகாடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கியூ பிரிவு போலீசார் , அருணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் […]
கூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம்
வண்டலூரை அடுத்த நல்லாம்பாக்கத்தில் பாலிடெக்னிக் மாணவரை சுட்டுக்கொன்ற கொலையாளி அளித்த வாக்குமூலத்தில் கூலிப்படையில் சேர அழைத்ததாகவும் வராததால் ஆத்திரத்தில் சுட்டுக்கொன்றேன் என தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (42). இவரது மூத்த மகன் முகேஷ் (19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார். முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த விஜய்யும் முகேஷும் பால்ய நண்பர்கள். எங்கு […]
மதுரை மாநகர காவல் துறையில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாருக்கு பணியிட மாற்றம்: தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா?
மதுரை மதுரை நகரில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாரை வெளி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரி கின்றனர். காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும், அவர்கள் தரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார்தாரர்களை அலைக்கழிக்கக் கூடாது, லஞ்சம் பெறக் கூடாது, சமரசம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடக் கூடாது என போலீஸாருக்கு காவல் ஆணை […]