*விருதுநகர் மாவட்ட செய்திகள்:- காவலர் இரங்கல் செய்தி:- அருப்புக்கோட்டை சப்டிவிசனுக்குட்பட்ட திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டையாவாக பணிபுரிந்து வந்த சாம்பிரேம்ஆனந்த் முத்துராமலிங்கபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது,அத்துடன் தலைக்கவசம் அணிந்து சென்று கொண்டிருந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி எதிரே இருந்த பேரிக்கார்டு மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் கல்லூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் காவல் […]
Day: November 20, 2019
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்த காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, சூளையைச் சேர்ந்த ரஞ்சித், வ/42 என்பவர் அவரது மனைவி மற்றும் தங்கையுடன் TN 04 AM 4609 என்ற பதிவெண் கொண்ட Hyndai Grand I 10 காரில் நேற்று 18.11.2019 இரவு சுமார் 07.40 மணியளவில் F2 எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் இடது பக்க முகப்பில் தீப்பற்றி எரிவதை கண்ட கார் ஓட்டுநர் மூல்சிங் காரை நடு ரோட்டில் நிறுத்தி அனைவரையும் இறங்கிவிட்டு தீயை அணைக்க […]
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் தகவல் பரிமாற கூடாது: மாணவ, மாணவியருக்கு காவல் ஆணையர் அறிவுரை
சமூக வலைதளங்களில், தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, தகவல் பரிமாற்றம் செய்வதோ கூடாது என பள்ளி மாணவ, மாணவியருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் சார்பில் எழும்பூரில் உள்ள மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை […]
பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸாரை தாக்கிய மாணவர் கைது
பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் 3 பெண் காவலர்களைத் தாக்கிய கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரது மகள் சத்யா(19). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப்(21) என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பர்கூர் காவல் நிலையத்தில், சத்யா மற்றும் பிரதாப் ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். […]
காவல்துறையின் பெருமையை உணர்த்தும் காவலர் அருங்காட்சியகம்
கோவை ஸ்டேட் பேங்க்சாலையில் ரயில் நிலையம் எதிரே, சிவப்பு, வெள்ளை வர்ண கட்டிடத்தில், காவல்துறைக்கே உரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது ‘காவலர் அருங்காட்சியகம்’. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை, புனரமைப்பு செய்து, காவல்துறையின் பெருமையை விளக்கும் வகையில், மாநகர காவல் துறை நிர்வாகத்தால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1918-ம் ஆண்டு எப்.ஏ.ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் 3,488 சதுரடி பரப்பில் மேற்கண்ட இடத்தில் ஹாமில்டன் கிளப் கட்டிடம் கட்டப்பட்டது. நூறாண்டை கடந்த இக்கட்டிடத்தில் மொத்தம் 16 […]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம்,அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம்,அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.11.2019 அன்று மாலையில், பொதுமக்கள் அதிகளவில் கூடும், முக்கிய சாலை சந்திப்புகள், வணிக கடைவீதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், தலைக்கவசம் அணிதலின் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் ஏற்படும் பாதுகாப்பான வாழ்க்கை, அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் நேரிடும் விபத்துக்கள், அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் ஏற்படும் […]
“PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பரையாற்றினார்.
நேற்று 19 11 2019 Prevention of child abuse day முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு சார்பாக மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார். திருமதி.H.ஜெயலட்சுமி, காவல் துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்கள், பள்ளியின் […]
சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெருவில் வசித்துவரும் மாலா வ/38, க/பெ.முருகன் என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொத்து சம்மந்தமாக மாலாவின் கணவருடன் பிறந்த 4 அக்கா, 2 அண்ணன் ஆகியோருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த 17.11.2019 அன்று மதியம் 3.30 மணியளவில் மேற்படி மாலா தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலை செய்யும் […]
ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு
ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4-வது பிளாக், என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் திரு.D.முரளி வ/56, த/பெ. துரைசாமி என்பவர் கடந்த 16.11.2019 அன்று 11.30 மணியளவில் F-2 எழும்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள பழைய […]
இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி அபகரிக்க முயன்ற பொறியாளர் உட்பட 2 பேர் கைது
இன்போசிஸ் நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரம் செய்து ரூ.5 கோடி வரை அபகரிக்க முயன்ற பெண் பொறியாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த சுகுமாறன் மனைவி மகேஷ்வரி (35). பிஇ பட்டதாரி. இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய பயிற்சி கட்டணத்துடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கடந்த வாரம் செய்தித்தாள் ஒன்றில் விளம் பரம் செய்திருந்தார். இதற்காக தல்லாகுளம் பகுதியிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றுக்கு நவ.16 அன்று […]