மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். […]
Day: October 29, 2022
முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். […]
மதுரையில் விதிமுறைகளை மீறியதாக 350 வாகனங்கள் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை
மதுரையில் விதிமுறைகளை மீறியதாக 350 வாகனங்கள் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை மதுரையில் 300 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது.வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். […]