Police Department News

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை .

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளிக் கோட்டை பகுதியில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், எஸ்.ஐ வெங்கடேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எர்ரகுட்டஅள்ளி பகுதியில் உள்ள பாறை இடுக்கில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மாரண்டஅள்ளி பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவில் விலங்குகளை வேட்டையாட […]

Police Department News

குழந்தை திருமணம் செய்த கனவன் மீது வழக்குப் பதிவு

குழந்தை திருமணம் செய்த கனவன் மீது வழக்குப் பதிவு தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே கண்டகபைல் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது.22) என்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி (வயது.16) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர், கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி கண்டகபைல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். தீடீரென சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவ […]

Police Department News

மதுரை ஜெயிலில் போக்சோ கைதி சாவு

மதுரை ஜெயிலில் போக்சோ கைதி சாவு ஜெயிலில் போக்சோ கைதி சாவடைந்தார்.இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவில்பாப்பாக்குடி, மல்லிகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). இவர் சில மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைதானார். இதில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார். ஆறுமுகத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை ஜெயில் வளாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக […]

Police Department News

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது மின்வாரிய அலுவலகத்தில் அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.அவர் திருடிய 12 கிலோ அலுமினிய கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை முத்துப்பட்டி மெயின் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாத்திற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி சென்று அலுமினிய கம்பி திருடி செல்வது தெரியவந்தது. இதுபற்றி மின்வாரிய உதவி பொறியாளர் தனமூர்த்தி இது தொடர்பாக […]

Police Department News

மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் ரூ.1.19 லட்சம் நூதன திருட்டு

மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் ரூ.1.19 லட்சம் நூதன திருட்டு மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக, ஓய்வு பெற்ற அதிகாரிகயிடம் மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு செல்போனில் குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் […]

Police Department News

சந்தேக நபர்கள் நடமாட்டமா? தகவல் தர போலீஸ் அழைப்பு!

சந்தேக நபர்கள் நடமாட்டமா? தகவல் தர போலீஸ் அழைப்பு! பொதுமக்கள், தங்கள் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் அவசர போலீஸ் எண் 100 க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என, போலீசார் அறிவித்துள்ளனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு அலுவலகம் மற்றம் நிர்வாகிகள் வீடுகளில், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், பல மணி நேரம் […]

Police Department News

நேரம் சரியில்லை என்றால் ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்

நேரம் சரியில்லை என்றால் ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம் உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது.ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள்.உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி இருக்கிறது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை ரூ.500 […]

Police Department News

வணிக வரித்துறை உதவி ஆணையர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

வணிக வரித்துறை உதவி ஆணையர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் மதுரை விராட்டிபத்து முத்து தேவர் காலனியை சேர்ந்தவர் மனோகரன் வணிக வரி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் கடந்த 22 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டார் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 63 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். […]

Police Department News

திருமங்கலத்தில் 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலத்தில் 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பெரிய கடைவீதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பெரிய கடைவீதியில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட வீட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் 63 மூட்டைகளில் 50 கிலோ வீதம் […]