காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் […]
Day: October 23, 2022
போதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்ய தனிப்படை தயார்
போதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்ய தனிப்படை தயார் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய, தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக, டி. ஜி. பி., சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். எனவே இனி மது அருந்தி வாகனங்களை ஓட்ட கூடாது என காவல் துறை அறிவித்துள்ளது.
வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்
வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி […]
கஞ்சா, மது பாட்டிலுடன் 2 பெண்கள் கைது
கஞ்சா, மது பாட்டிலுடன் 2 பெண்கள் கைது மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனை பேரில், கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வாழைத்தோப்பு சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை […]
மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மதுரை மண்டல அமலாக்க ப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, கொங்கனாகுறிச்சி என்.சுப்பலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், வத்திராயிருப்பு, முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் […]
தீ விபத்தில்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு
தீ விபத்தில்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு காரைக்குடியில் தீயணைப்பு துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திரு.சண்முகம் அவர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்களின் ஏற்படுத்தினர். அதன்படி மானகிரியில் உள்ள ஷிரி ராஜா வித்தியா விகாஷ் பள்ளியில் மற்றும் ஜோசப் நர்சரி பிரைமரி பள்ளி காரைக்குடி வியாழக்கிழமை சந்தை மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி […]
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள்-2022” – கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள்-2022” – கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற “காவலர் வீரவணக்க நாள்-2022” -ல் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிக்க வழங்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், மதுரை […]
இத்தனை குறைகளுடன் எப்படித்தான் வசிப்பதோ 18 வது வார்டு மக்கள் புலம்பல் விரைவில் தீர்வு கிடைக்கும் வார்ட்டு கௌன்சிலர் வாக்குறிதி
இத்தனை குறைகளுடன் எப்படித்தான் வசிப்பதோ 18 வது வார்டு மக்கள் புலம்பல் விரைவில் தீர்வு கிடைக்கும் வார்ட்டு கௌன்சிலர் வாக்குறிதி பாதாள சாக்கடை குடிநீர் இணைப்புக்காக தோண்டிய குழிகள் சீரமைக்கப்படாததால் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி மழை காலங்களில் போக்குவரத்துக்கு தகுதியற்ற ரோடுகளாக உள்ளன. சாக்கடை வசதியின்றி கழிவு நீர் வீட்டின் முன்பு தேங்கி நிற்கிறது என வசிக்க தகுதியற்றதாக 18 வது வார்ட்டு உள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர். தகுதியற்ற ரோடுகள் மணி எஸ். ஆலங்குளம் […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம் மதுரை மாநகரம் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல்துறையினர் தெப்பக்குளம் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்களின் தலைமையில் இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்கள்