மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என கலெக்டரிடம் புகார் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான […]
Month: June 2023
தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது […]
கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகள்
கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மாணவ-மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் உள்ள பழமையான சங்கராலிங்கபுரம் அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு தற்போது அரசு ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றவும் கூடாது, பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும். அதேபோல இந்த பள்ளியின் கட்டிடம் […]
வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சோளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது மொத்தம் 131 கிலோ தடைசெய்யப்பட்ட […]
கிராம உதவியாளரை பணிநீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை- மாவட்ட கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
கிராம உதவியாளரை பணிநீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை- மாவட்ட கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 60 சதவீதம் மாற்றுத்திறனாளியான நான், கடந்த டிசம்பர் மாதம் முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட பணியானது […]
குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மதுரை மாநகராட்சி 67-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடியி ருப்போர் நல சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் சரியில்லாமல் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. பாதாள சாக்கடை வசதி இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சரியான முறையில் இல்லை. குடிநீர் தினசரி வழங்க […]
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு எட்டு விதமான போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக தீவிர வாகன சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் அதி வேகம் சிக்னல்களை மீறுதல் மொபைல் போனில் பேசியபடியும்குடி போதையிலும் வாகனம் ஓட்டுதல் எதிர் திசையில் வாகனத்தை செலுத்துதல் அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றுதல் குறித்த விதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் அதே போல் காரில் சீட் […]
ஒரே நாளில் 3 இடங்களில் வேட்டை: பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ஒரே நாளில் 3 இடங்களில் வேட்டை: பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் திம்மாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் வந்த பெண் அணிந்திருந்த தாலி செயினை மர்ம நபர்கள் கடந்த 31-ந்தேதி பறித்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் தனியாக சென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும் வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த செயினை மர்ம நபர்கள் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது25). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது வண்டியை நிறுத்திவிட்டு ரேஷ் செய்ததால் அதிக சத்தம் எழுந்தது. அப்போது அங்கு வந்த நாகேஷ் அந்த வாலிபரை தட்டிகேட்டதால் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து தொழிலாளி சாவு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தேவர்குந்தானி பகுதியைச் சேர்ந்தவர் மண்டப்பா (வயது45). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (36), கரியசத்திரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு தங்கடிகுப்பம் அருகே வந்தனர். அப்போது அவர்கள் கோத்தகிருஷ்ண–பள்ளி-சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர் பாராதவிதமாக வண்டி நிலை தடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது. இதில் பலத்த […]